தடுப்புச் சுவர் அமைக்கக் கோரிக்கை

அரூரை அடுத்த ஆட்டியானூர் புதூரில் சாலையோரம் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரூரை அடுத்த ஆட்டியானூர் புதூரில் சாலையோரம் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரூர் ஊராட்சி ஒன்றியம், எட்டிப்பட்டி அழகிரி நகர்- ஆட்டியானூர் இணைப்புச் சாலை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் கொண்டதாகும். இந்த சாலையானது தற்போது பிரதம மந்திரி கிராமச் சாலைகள் திட்டத்தில் தார்ச் சாலையாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஆட்டியானூர் புதூர் எனுமிடத்தில் சாலையோரத்தில் விவசாயக் கிணறுகள் உள்ளன. சாலையின் வளைவான பகுதியில் மிகவும் ஆபத்தான நிலையில் இந்த திறந்தவெளி கிணறுகள் இருப்பதால், விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே, ஆட்டியானூர் புதூரில் சாலையோரத்தில் தடுப்புச் சுவர்களை அமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com