தடகளம்: 450 பேர் பங்கேற்பு

தருமபுரியில் மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் 450-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

தருமபுரியில் மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் 450-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
தருமபுரி மாவட்ட தடகளக் கழகம் சார்பில் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் சனிக்கிழமை  நடைபெற்றது. மாவட்டம் முழுவதிலுமிருந்து 450-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று விளையாடினர். போட்டிகளில் தருமபுரி ஸ்ரீ விஜய் வித்யாலயா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் செல்லியம்பட்டி சேக்கரடாட் பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றன.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ப.ராஜன் பரிசு வழங்கி பாராட்டினார். தடகள சங்கத் தலைவர் ஆர்.நடராஜன், செயலர் அறிவு துணைத் தலைவர் ஜெ.பி.நாகராஜன், உடற்கல்வி ஆய்வாளர் முத்துக்குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் பியூலா ஜேன் சுசீலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com