வாகன விபத்தில் இருவர் பலி

தருமபுரி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

தருமபுரி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
தருமபுரி-அரூர் நெடுஞ்சாலையில் ராஜாபேட்டை பகுதியில் புதன்கிழமை இரவு எதிரெதிரே வந்த 2 இருசக்கர வாகனங்கள் எதிர்பாராத விதமாக மோதிக் கொண்டன. 
இந்த விபத்தில் வெள்ளோலை கிராமத்தைச் சேர்ந்த பூவரசன், மற்றொரு வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் என்ற இரண்டு பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.  விபத்து நடந்த இடத்தில் தருமபுரி டிஎஸ்பி ராஜ்குமார் நேரில் ஆய்வு செய்தார். தருமபுரி நகர போலீஸார் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com