ஆக.29-இல் எஸ்.தாதம்பட்டியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்

தருமபுரி மாவட்டம், அரூர் அருகேயுள்ள எஸ்.தாதம்பட்டியில் வருகிற ஆக.29இல் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது.

தருமபுரி மாவட்டம், அரூர் அருகேயுள்ள எஸ்.தாதம்பட்டியில் வருகிற ஆக.29இல் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது.
 இது குறித்து, மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்துக்குள்பட்ட தாதம்பட்டி கிராமத்தில் வருகிற ஆக.29இல் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 10 மணிக்கு நடைபெறும் இம் முகாமில், மாவட்ட ஆட்சியர் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்களும் பங்கேற்கின்றனர். எனவே, இந்த முகாமில், எஸ்.தாதம்பட்டி கிராமம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com