இருளப்பட்டி ஸ்ரீ காணியம்மன் கோயில் தேரோட்டம்

பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள இருளப்பட்டி அருள்மிகு ஸ்ரீ காணியம்மன் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள இருளப்பட்டி அருள்மிகு ஸ்ரீ காணியம்மன் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
 பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், இருளப்பட்டியில் வரலாற்று சிறப்பு மிக்க அருள்மிகு ஸ்ரீ காணியம்மன் திருக்கோயில் உள்ளது. இக் கோயில் தேரோட்டம் ஆகஸ்ட் 13-ம் தேதி பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து கோயில் கொடியேற்று விழா, சுவாமியின் பல்லக்கு உற்சவம், வாணவேடிக்கை, நையாண்டி மேளம், சுவாமிகளின் திருக்கல்யாணம் மற்றும் சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்றன.
 புதன்கிழமை அருள்மிகு ஸ்ரீ காணியம்மனின் தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக திருத்தேர் மீது பக்தர்கள் உப்பு, மிளகு, முத்துக்கொட்டைகளை வீசி நேர்த்திக்கடன் செலுத்தினர். இவ் விழாவையொட்டி அரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்கள் அனைத்தும் கோபாலபுரம் சர்க்கரை ஆலை, அ.பள்ளிப்பட்டி வழியாக சென்றன. அரூர், பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இருளப்பட்டி, புதுப்பட்டி, கவுண்டம்பட்டி, மூக்காரெட்டிப்பட்டி, பாப்பம்பாடி, அ.பள்ளிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த அனைத்து சமுதாய ஊர் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள், தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் இந்த தேர்திருவிழாவில் கலந்து கொண்டனர். அரூர் டிஎஸ்பி ஏ.சி.செல்லப்பாண்டியன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் பதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com