முதியோர் ஓய்வூதியம் ரூ.3 ஆயிரமாக உயர்த்த வலியுறுத்தல்

முதியோர் ஓய்வூதியம் ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

முதியோர் ஓய்வூதியம் ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
 இதுகுறித்து அச்சங்கத்தின் மாவட்டச் செயலர் ஜெ.பிரதாபன் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: முதியோர் ஓய்வூதியம் வழங்கப்படுவதில் தற்போது கடுமையான நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதால், பல லட்சம் மனுக்கள் தனி வட்டாட்சியர் ( சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகங்களில் தேங்கியிருக்கின்றன. இந்த நிலையில், தற்போது தமிழக முதல்வர் அறிவித்துள்ள முதியோர் ஓய்வூதியம் 5 லட்சம் பேருக்கு வழங்கப்படும் என்ற அறிவிப்பின் கீழ், பெறப்படும் மனுக்களை நிபந்தனையின்றி 60 வயது கடந்த விவசாய தொழிலாளர்கள், சிறு மற்றும் குறு விவசாயிகள், ஆண், பெண்களுக்கு வழங்க வேண்டும். மேலும் இத்தொகையை ரூ.3,000-ஆக உயர்த்தி வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com