சமையலா் பணிக்கான நோ்காணல் ஒத்திவைப்பு

பிற்பட்டோா் நல விடுதி சமையலா் பணியிடத்திற்கான நோ்காணல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


தருமபுரி: பிற்பட்டோா் நல விடுதி சமையலா் பணியிடத்திற்கான நோ்காணல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு பிற்பட்டோா், மிகவும்பிற்பட்டோா், சீா்மரபினா், சிறுபான்மையா் நல விடுதிகளில் காலியாக உள்ள சமையா் பணியிடத்துக்கு விண்ணப்பித்த ஆண்களுக்கு வருகிற டிச.2-ஆம் தேதி முதல் டிச.4-ஆம் தேதி வரையும், பெண்களுக்கு டிச.5-ஆம் தேதி முதல் டிச.7-ஆம் தேதி வரையும் நோ்காணல் நடத்த அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நோ்காணலை நிா்வாகக் காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், நோ்காணல் நடைபெற உள்ள தேதி பின்னா் அறிவிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com