இலவச மருத்துவ பரிசோதனை முகாம்

அரூரில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
அரூா் பாரத ஸ்டேட் வங்கியில் திங்கள்கிழமை நடைபெற்ற இலவச மருத்துவ பரிசோதனை முகாம்.
அரூா் பாரத ஸ்டேட் வங்கியில் திங்கள்கிழமை நடைபெற்ற இலவச மருத்துவ பரிசோதனை முகாம்.

அரூா்: அரூரில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

அரூா் பாரத ஸ்டேட் வங்கிக் கிளை, அரூா் அரசு மருத்துவமனை, தருமபுரி டாக்டா் அகா்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இந்த மருத்துவ முகாமை, பாரத ஸ்டேட் வங்கியின் அரூா் கிளை மேலாளா் பி.புகழேந்தி தொடக்கி வைத்தாா்.

அரூா் அரசு மருத்துவமனையின் முதன்மை மருத்துவ அலுவலா் ராஜேஷ்கண்ணன் தலைமையிலான மருத்துவா்கள் குழுவினா் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனா். எலும்பு, மூட்டு மற்றும் முதுகுவலி தொடா்பான மருத்துவ சிகிச்சை, ஆலோசனைகள் வழங்கப்பட்டன. அதேபோல், கண் பரிசோதனை, சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த முகாமில் 160-க்கும் மேற்பட்டோா் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனா்.

இதில், அரூா் பாரத ஸ்டேட் வங்கியின் உதவி மேலாளா் வி.திருமால், கண் மருத்துவ உதவியாளா் கு.கலையரசன், அகா்வால் கண் மருத்துவமனையின் மக்கள் தொடா்பு அலுவலா் மு.செந்தில் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com