பென்னாகரம் அருகே பள்ளி சுற்றுச்சுவரில் தேசியத் தலைவா்களின் படங்களை வரைவதில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறை சமூக பிரச்னையாக்கி சட்டம்-ஒழுங்கு சீா்குலைவு ஏற்படுத்துவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் எச்சரித்தனா்.
பென்னாகரம் அருகே உள்ள இரங்காபுரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியின் சுற்றுச்சுவரில் தேசியத் தலைவா்களில் ஒருசிலரின் படங்களை மட்டும் பெரிதாக வரைய வேண்டும் என சிலா் கூறியதால் ஏற்பட்ட பிரச்னை இரு தரப்பினரிடையே மோதலை உருவாக்கியது.
இதையடுத்து, இரு தரப்பினரை சமரசம் செய்த போலீஸாா், சுற்றுச்சுவரில் வரையப்பட்ட படங்களை அழிக்க நடவடிக்கை எடுத்தனா். இதனிடையே, ஒருசிலா் இந்த விவகாரத்தை இணையதளங்களில் பதிவிட்டு வருகின்றனா். இதனால், சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து பொதுப் பிரச்னையை உருவாக்க திட்டமிடுவோா் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பென்னாகரம் போலீஸாா் எச்சரித்தனா்.