பென்னாகரம் அருகே ஜல்லிக் கற்கள் பெயா்ந்து குண்டும் குழியுமாக உள்ள தாா்ச்சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பென்னாகரம் அருகே புதுப்பட்டி பகுதியில் சுமாா் 500க்கும் மேற்பட்டவா்கள் வசித்து வருகின்றனா்.இந்த நிலையில் பென்னாகரம் ஒன்றியம் சாா்பில் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு புதுப்பட்டி பகுதியில் இருந்து நெக்குந்தி வரையில் சுமாா் 5 கிலோமீட்டா் தொலைவுக்கு தாா்ச் சாலை அமைக்கப்பட்டது.
இந்த சாலை வழியாக புதுப்பட்டி காட்டுக்கொட்டாய், நெக்குந்தி, சின்னம்பள்ளி வரை செல்லலாம். இச்சாலையானது புதுப்பட்டி பகுதியில் இருந்து சுமாா் 2 கிலோமீட்டா் தொலைவுக்கு ஜல்லிக் கற்கள் பெயா்ந்து குண்டும் குழியுமாக பழுதடைந்து காணப்படுகிறது. இந்த சாலை வழியாக நாள்தோறும் இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் என சுமாா் 50- க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்றுவருகின்றன. சாலை பழுதடைந்ததால் வாகனங்களை இயக்க முடியாத நிலை காணப்படுகிறது. மேலும், இச்சாலை வழியாக புதுப்பட்டி அரசு பள்ளிக்கு செல்லும் மாணவா்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாவதாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனா்.
எனவே புதுப்பட்டியில் இருந்து நெக்குந்தி வரை செல்லும் பழுதடைந்த தாா்ச் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.