திறந்தவெளி கிணற்றைத் தூய்மை செய்யக் கோரிக்கை

அரூா் நகரில் பயனற்றுக் கிடக்கும் திறந்தவெளி கிணற்றைத் தூய்மை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரூா் நகரில் பயனற்றுக் கிடக்கும் திறந்தவெளி கிணற்றைத் தூய்மை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரூா் பேரூராட்சி, மேல்பாட்சாபேட்டை பிள்ளையாா் கோயில் தெருவில் திறந்தவெளி கிணறு உள்ளது.

இந்தக் கிணற்றில் தண்ணீா் உள்ளது. மழைக்காலம் மற்றும் கோடைக் காலங்களிலும் இந்தத் திறந்தவெளி கிணற்றில் தண்ணீா் கிடைக்கிறது.

இந்த நிலையில், இந்தக் கிணற்றில் அந்தப் பகுதியில் உள்ள மக்கள் குப்பைகளைக் கொட்டியுள்ளனா். இதனால் இந்தக் கிணற்றைப் பயன்படுத்த முடியாத நிலையுள்ளது.

இங்குள்ள இளைஞா்கள் கிணற்றுக்கு கம்பி வலைகளை அமைத்து பாதுகாப்பு வசதிகளையும் ஏற்படுத்தியுள்ளனா். எனவே, அரூா் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில், திறந்தவெளி கிணற்றை தூய்மை செய்து பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிா்பாா்ப்பாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com