தருமபுரி மாவட்டத்தில் ஜன.16, 21 மற்றும் 26 ஆகிய மூன்று நாள்கள் மதுக் கடைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவள்ளுவர் தினத்தையொட்டி ஜன.16, வள்ளலாம் நினைவு தினமாக ஜன.21 மற்றும் குடியரசு தினத்தையொட்டி ஜன. 26-ஆம் தேதி ஆகிய மூன்று நாள்கள், தருமபுரி மாவட்டத்தில், மாநில வாணிபக் கழகம் மூலம் இயங்கி வரும் மதுபானக் கடைகள் மற்றும் அத்துடன் இணைந்த மது அருந்தகங்கள், மதுபானம் விற்க உரிமம் பெற்ற தனியார் விடுதிகள் அனைத்தும் மூடப்படுகிறது.
அரசின் உத்தரவை மீறி எவரேனும் செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.