தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில் வேளாண் விரிவாக்க மறுசீரமைப்புத் திட்டம் சார்பில் விவாசாயிகளுக்கு அறுவடைக்குப் பிறகு பின்பற்ற வேண்டிய தொழில்நுட்பப் பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.
வேளாண் அலுவலர் மணி ராஜன் தலைமை வகித்து, அறுவடைக்கு பிந்தைய தொழில்நுட்பங்கள், மதிப்புக் கூட்டுதல் குறித்து எடுத்துரைத்தார். உதவி வேளாண் அலுவலர் பெரியசாமி, உழவர் சந்தைகளில் விளைபொருள்கள் விற்பனை செய்வது, ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் இருப்புவைத்து விற்பனை செய்து அதிக லாபம் ஈட்டுவது குறித்து விளக்கினார்.
உதவி வேளாண் அலுவலர் சக்திவேல், வட்டார தொழில்நுட்ப மேலாளர் சரவணன், உதவி தொழில் மேலாளர் அஸ்வினி மற்றும் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.