தருமபுரி மாவட்ட மைய நூலகம் அருகே தகடூர் புத்தகப் பேரவை சார்பில் பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது .
விழாவில், மொரப்பூர் பாரதி குழுவினரின் கிராமிய கலை நிகழ்ச்சிகள், சோலைக்கொட்டாய் பள்ளி மாணவி பூவிழியின் பாடல், பம்பை இசை நிகழ்ச்சி, தருமபுரி மாவட்ட கவிஞர்களின் கவிதை வாசிப்பு, திரைக் கலைஞர்களின் நகைச்சுவை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவில், துணைக் காவல் கண்காணிப்பாளர் த.காந்தி, முன்னாள் எம்.பி. இரா.செந்தில், தகடூர் புத்தகப் பேரவை நிர்வாகிகள் இரா.சிசுபாலன், ஆர்.கே.கண்ணன், ஓய்வுபெற்ற மாவட்டக் கல்வி அலுவலர் சி.ராஜசேகரன், விஞ்ஞானி குந்தவை, எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.