நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி

தருமபுரி மாவட்டம்,  நல்லானூர் ஜெயம்  பொறியியல் கல்லூரி தேசிய மாணவர் படை சார்பில் நெகிழிப் பொருள்கள் ஒழிப்பு

தருமபுரி மாவட்டம்,  நல்லானூர் ஜெயம்  பொறியியல் கல்லூரி தேசிய மாணவர் படை சார்பில் நெகிழிப் பொருள்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வுப் பேரணி அண்மையில் நடைபெற்றது.
கல்லூரி  வளாகத்திலிருந்து இப்பேரணியை, கல்லூரி முதல்வர் சுப்பராயன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி, பிக்கம்பட்டி, கோணங்கி அள்ளி, நல்லானூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் வழியாக மீண்டும் கல்லூரி வளாகத்தை அடைந்தது. இதில், நெகிழிப் பொருள்களின் பயன்பாட்டால் விளையும் தீமைகள் குறித்தும், அவற்றை ஒழித்து மாசில்லா பொருள்களை பயன்படுத்த வலியுறுத்தியும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவ, மாணவியர் ஏந்தி சென்றனர். இதில் தேசிய மாணவர் படை அலுவலர் கேப்டன் முருகன் மற்றும் கல்லூரிப் பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com