தருமபுரியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பொங்கல் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
தருமபுரி மக்களவை உறுப்பினர் அலுவலக வளாகத்தில் அக்கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலர் எஸ்.பி.வெங்டேஸ்வரன் தலைமையில் இவ்விழா நடைபெற்றது. முன்னாள் எம்.பி.க்கள் இரா.செந்தில், பாரிமோகன், மாவட்டச் செயலர் சண்முகம், மாநிலத் துணைத் தலைவர் பெ.சாந்தமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதில், பாரம்பரிய முறைப்படி, கரும்பு, மஞ்சளோடு மண்பானையில் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தி பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதைத் தொடர்ந்து, விழாவில், பங்கேற்ற கட்சியினருக்கு கரும்பு, சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டன. இந்த விழாவில், பா.ம.க. நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.