தருமபுரியில் இன்று எம்ஜிஆர் பிறந்தநாள் விழா

தருமபுரி மாவட்டத்தில் அதிமுக சார்பில் வியாழக்கிழமை (ஜன.17) எம்ஜிஆர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட உள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் அதிமுக சார்பில் வியாழக்கிழமை (ஜன.17) எம்ஜிஆர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட உள்ளது.
இதுகுறித்து, மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தருமபுரி மாவட்டத்தில், அதிமுக சார்பில், கட்சியின் நிறுவனத் தலைவர் எம்ஜிஆரின் 102-ஆவது பிறந்தநாள் விழாக் கொண்டாடப்படவுள்ளது. விழாவையொட்டி, அதிமுகவினர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளைகள், பேரூர், ஒன்றியங்கள் மற்றும் நகரப் பகுதியில் எம்ஜிஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும்.
அதேபோல, உருவச் சிலை இல்லாத இடங்களில் அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் பொங்கலை வழங்கி கொண்டாட வேண்டும். மேலும், கட்சிக் கொடிகளை புதிதாக ஏற்றிட வேண்டும்.
எனவே, கட்சியின் நிர்வாகிகள், சார்பு அணியினர், உள்ளாட்சி மன்ற முன்னாள் பொறுப்பாளர்கள், கூட்டுறவு சங்க இயக்குநர்கள், செயல்வீரர்கள் இந்த விழாவைக் கொண்டாட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com