தருமபுரி
தருமபுரி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதால், சனிக்கிழமை (ஜன. 19) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்விநியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக மின் வாரியம் தெரிவித்துள்ளது.
மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: ராஜாபேட்டை, சோலைக்கொட்டாய், நூலஅள்ளி, கடகத்தூர், பழைய தருமபுரி, வெள்ளோலை, முக்கல்நாய்க்கன்பட்டி, குப்பூர், மூக்கனூர், குண்டலப்பட்டி மற்றும் தருமபுரி நகர சுற்றுவட்டாரப் பகுதிகள்.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதால், சனிக்கிழமை (ஜன. 19) காலை 9 முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறிபாளர் கு.முத்துசாமி தெரிவித்துள்ளார்.
மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: கிருஷ்ணகிரி, ராஜாஜி நகர், வீட்டு வசதி வாரியம் பகுதி - 1, பகுதி -2, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பழைய பேட்டை, குந்தாரப்பள்ளி, பையனப்பள்ளி, பி.கொத்தூர், கொண்டேப்பள்ளி, பில்லனகுப்பம், சாமந்தமலை, தளவாயபள்ளி, நெடுமறுதி, கே.திப்பனபள்ளி, வேப்பனஅள்ளி, எம்.பி.பள்ளி, வரட்டனப்பள்ளி, எம்.டி.வி.நகர், நாரலப்பள்ளி, போத்திநாயனப்பள்ளி, காட்டிநாயனப்பள்ளி, அரசு ஆண்கள் கலைக் கல்லூரி, சுண்டேகுப்பம், கிருஷ்ணகிரி அணை, கத்தேரி, குண்டலப்பட்டி, சூலகுண்டா, ஆலப்பட்டி, மிட்டப்பள்ளி, மாதேப்பட்டி, செம்படமுத்தூர், பெல்லாரம்பள்ளி, கே.எம்.பட்டி, கூலியம், நரணிகுப்பம், தடத்தரை, பூதிமுட்லு, ராமசந்திரம், சாதனப்பள்ளி, கோனேகவுண்டனூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.