தருமபுரி
பாலக்கோடு சீரியம்பட்டியில் எருதாட்டம்
பாலக்கோடு சீரியம்பட்டியில் பொங்கலையொட்டி திங்கள்கிழமை நடைபெற்ற எருதாட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட காளைகள்பங்கேற்றன.
பாலக்கோடு சீரியம்பட்டியில் பொங்கலையொட்டி திங்கள்கிழமை நடைபெற்ற எருதாட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட காளைகள்
பங்கேற்றன.
சீரியம்பட்டி,கோட்டூர்,பெல்ரம்பட்டி,பேவுஅள்ளி உள்பட 9-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்ற இந்த விழாவில் காளைகளை அலங்காரம் செய்து வாடிவாசல் வழியாக ஓடவிட்டனர். இந்த விழாவில் 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
பாலக்கோடு மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் விழாவில் கலந்து கொண்டனர். மாரண்டஅள்ளி போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.