தடுப்புச் சுவரால் ஏற்படும் வாகன விபத்துகளைக் கட்டுப்படுத்த வலியுறுத்தல்

அரூர்-திருவண்ணாமலை சாலையில் உள்ள தடுப்புச் சுவரால் ஏற்படும் வாகன விபத்துகளை கட்டுப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

அரூர்-திருவண்ணாமலை சாலையில் உள்ள தடுப்புச் சுவரால் ஏற்படும் வாகன விபத்துகளை கட்டுப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தீர்த்தமலை வழியாகச் செல்லும் அரூர்-திருவண்ணாமலை சாலையில் செல்லம்பட்டி, பொய்யப்பட்டி, டி. ஆண்டியூர் உள்ளிட்ட இடங்களில் தார்ச் சாலையின் மையப் பகுதியில் தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தத் தடுப்புச் சுவர்கள் தார் சாலையின் வளைவான பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன. மூன்று அல்லது நான்கு வழிச் சாலைகள் சேரும் இடத்தில் தடுப்புச் சுவர்கள் இருந்தால் வாகன ஓட்டிகள் மெதுவாகவும், சாலையின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு சாலைக்கு பிரிந்து செல்வதற்கு ஏதுவாகவும் இருக்கும்.
ஆனால், சாலையின் வளைவான பகுதியில் தார்ச் சாலையின் மையப் பகுதியில் தடுப்புச் சுவர்கள் இருப்பதால், தொலைதூர பகுதியில் இருந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு தடுப்புச் சுவர்கள் இருப்பது தெரிவதில்லை.
அதேபோல், தடுப்புச் சுவர்களின் அருகில் எதிரொளிப்பான்கள், தகவல்கள் பலகைகள் ஏதுமில்லை. இதனால், இரவு நேரங்களில் வேகமாக வரும் கார், லாரி, பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் இந்தத் தடுப்புச் சுவரில் மோதுவதால் அடிக்கடி விபத்துகள் நேரிடுகின்றன. எனவே,  வளைவான பகுதிகளில் தார்ச் சாலையில் தடுப்புச் சுவர்கள் அமைக்கும் இடங்களை நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்துத் துறையினர் இணைந்து ஆய்வு நடத்த வேண்டும்.  அதேபோல், தார் சாலையின் வளைவான பகுதியில் சாலையை கூடுதலாக அகலப்படுத்த வேண்டும். விபத்துகள் அடிக்கடி நேரிடும் பகுதியில் மிகச்சிறிய அளவிலான வேகத் தடைகள், எதிரொளிப்பான்களை அமைக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com