செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஆந்திர ஐ.ஜி. தருமபுரியில் ஆலோசனை

செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஆந்திர மாநில ஐ.ஜி., தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப. ராஜனிடம் புதன்கிழமை ஆலோசனை நடத்தினார். 

செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஆந்திர மாநில ஐ.ஜி., தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப. ராஜனிடம் புதன்கிழமை ஆலோசனை நடத்தினார். 
ஆந்திர மாநிலம், திருப்பதி சேஷாச்சலம், நல்லமலா ஆகிய வனப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து செம்மரங்கள் அதிக அளவில் வெட்டிக் கடத்தப்படுகின்றன.
இந்த மரம் வெட்டும் பணியில் ஆந்திர மாநிலத்தின் எல்லையோரம் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் சிலர், அறியாமையின் காரணமாக ஈடுபடுகின்றனர். இதில், தருமபுரி மாவட்டம் அரூர் அருகே வனப்பகுதி கிராமங்களில் வசிக்கும் மழைவாழ் மக்கள் சிலரும் செம்மரங்களைக் கடத்தும் கும்பல் மற்றும் இடைத் தரகர்களின் பேச்சுகளை நம்பி, ஆந்திரத்துக்குச் சென்று செம்மரம் வெட்டி காவல்துறையிடம் சிக்கிக் கொள்கின்றனர்.
மேலும், சிலர் அங்குள்ள சிறைகளில் சிக்கித் தவிக்கின்றனர். இவற்றைத் தடுக்க, தமிழக எல்லையோர காவல்துறையிடனரிடம் ஆந்திர மாநில செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். 
இதன் தொடர்ச்சியாக, புதன்கிழமை ஆந்திர மாநில செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. காந்தராவ், ஆந்திர மாநில முதன்மை வனப் பாதுகாவலர் சரவணன் மற்றும் செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார், வனத் துறையினர், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில், ஆலோசனையில் ஈடுபட்டனர். இதில், தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.ராஜன் மற்றும் போலீஸார் கலந்து கொண்டனர். இக் கூட்டத்தில், செம்மரம் வெட்டுவதைத் தடுக்க, தருமபுரி மலைவாழ் மக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக போலீஸார் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com