காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசுக்கு எதிராக தருமபுரியில் காங்கிரஸ் கட்சியினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


மத்திய அரசுக்கு எதிராக தருமபுரியில் காங்கிரஸ் கட்சியினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தருமபுரி தொலைத்தொடர்பு நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் கோவி.சிற்றரசு தலைமை வகித்து பேசினார். முன்னாள் எம்.பி. தீர்த்தராமன், நகரச் செயலர் செந்தில்குமார், மாவட்ட நிர்வாகி கனகராஜ் உள்ளிட்டோர் பேசினர்.
கர்நாடக மாநில அரசை கவிழ்க்கும் முயற்சிக்கு மத்திய அரசு துணை போகக் கூடாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கலைக்கும் ஜனநாயக விரோத செயலை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், திரளான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com