பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த மழை 26.2 மில்லி மீட்டராகப் பதிவாகின.
அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு லேசான இடியுடன் கூடிய மழை பெய்தது. இந்த மழையானது சுமார் 2 மணி நேரம் பெய்தது. இதில், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் 26.2 மில்லி மீட்டர் மழையும், அரூர் வட்டாரப் பகுதியில் 21 மில்லி மீட்டர் மழையும் பதிவாகின. கோடை வெப்பம் காரணமாக, கால்நடைகளுக்கு தீவனம் இல்லாமல் இருந்தது. தற்போது, லேசான மழைப் பொழிவின் காரணமாக கால்நடைகளுக்கு தீவனம் கிடைக்கும் நிலையுள்ளது. பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.