தருமபுரி அரசுக் கல்லூரியில் ஜூன் 18-இல் 2-ஆம் கட்ட கலந்தாய்வு

தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான 2-ஆம் கட்ட கலந்தாய்வு வருகிற ஜூன் 18-ஆம் தேதி தொடங்குகிறது.

தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான 2-ஆம் கட்ட கலந்தாய்வு வருகிற ஜூன் 18-ஆம் தேதி தொடங்குகிறது.
இது குறித்து, கல்லூரி முதல்வர் (பொ) ஜா.பாக்கியமணி புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு அண்மையில் நடந்து முடிந்தது.
இந்த நிலையில், வருகிற ஜூன் 18-ஆம் தேதி இரண்டாம் கட்ட கலந்தாய்வு தொடங்கி நடைபெற உள்ளது.
இதில், அன்றைய தினம் கலை மற்றும் வணிகவியல் பாடப்பிரிவுகளுக்கு பிளஸ் 2 வகுப்பில் பகுதி 3-இல் 250 முதல் 201 மதிப்பெண்கள் வரை பெற்ற மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும். அதேபோல, ஜூன் 19-ஆம் தேதி கலை மற்றும் வணிகவியல் பாடப்பிரிவுகளுக்கு பிளஸ் 2 வகுப்பில் பகுதி 3-இல் 200 முதல் 176 மதிப்பெண்கள் வரை பெற்ற மாணவர்களுக்கும், ஜூன் 20-ஆம் தேதி கலை, வணிகவியல், தமிழ், ஆங்கிலம், அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பித்த இஸ்லாமிய மாணவர்கள், அனைவரும் கலந்து கொள்ளலாம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com