விருது பெற்ற மழலையர் பள்ளித் தாளாளருக்கு தருமபுரியில் அண்மையில் பாராட்டு விழா நடைபெற்றது.
தருமபுரி வேணுகோபால் தெருவில் உள்ள கிரேஷ் மழலையர் பள்ளித் தாளாளர் பி.வேலாயுதன். இவருக்கு, திருச்சி ஆரோக்கியா அறக்கட்டளை சார்பில் அண்மையில் நடைபெற்ற விழாவில் சாதனையாளர் சிகரம் விருது வழங்கப்பட்டது.
இந்த விருது பெற்ற, வேலாயுதனுக்கு தருமபுரியில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில், ஆசிரியர் கே. மாதையன், திராவிடர் கழக மண்டலச் செயலர் கரு. பாலன் உள்ளிட்டோர் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனர்.