தருமபுரியில் ஜூன் 21-இல் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்

தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் வருகிற  ஜூன் 21 - ஆம் தேதி நடைபெற உள்ளது.

தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் வருகிற  ஜூன் 21 - ஆம் தேதி நடைபெற உள்ளது.
இது குறித்து,  மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:  தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் வருகிற வெள்ளிக்கிழமை  (ஜூன் 21) காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இக் கூட்டத்தில், வேளாண்துறை, தோட்டக்கலைத் துறை உள்பட அனைத்துறை அலுவலர்கள் பங்கேற்கின்றனர். எனவே, மாவட்ட விவசாயிகள் இக் கூட்டத்தில் பங்கேற்று தங்களது குறைகள், கோரிக்கைகள் தெரிவித்து நிவர்த்தி செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com