தொழிலாளர் துறை அலுவலக உதவியாளர் பணி: ஜூன் 24-இல் நேர்முகத் தேர்வு தொடக்கம்

தொழிலாளர் துறையில் காலியாக உள்ள அலுவலக  உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு மற்றும்

தொழிலாளர் துறையில் காலியாக உள்ள அலுவலக  உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு மற்றும்  சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 24-இல் தொடங்கி 27 -ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதுகுறித்து,  கிருஷ்ணகிரி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தே.ஞானவேல் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:  தொழிலாளர் துறையில், கோவை கூடுதல் தொழிலாளர்  ஆணையர்  மண்டலத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான  நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு வருகிற ஜூன் 24  முதல் 27-ஆம் தேதி வரை கிருஷ்ணகிரி, புதுப்பேட்டையிலுள்ள தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்)  அலுவலகத்தில் நடைபெற உள்ளது.  தகுதியின் அடிப்படையில்  விண்ணப்பதாரர்களின் முகவரிக்கு அஞ்சல் மூலமாக நேர்முகத்  தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கான அழைப்புக் கடிதம்  அனுப்பப்பட்டுள்ளது.
தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த அழைப்புக் கடிதம்  பெறப்படாத தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள், கிருஷ்ணகிரியில் இயங்கி வரும் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தை ஜூன்  20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் நேரில் அணுகி அழைப்புக் கடிதத்தினை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். அழைப்புக் கடிதத்தினை பெற வரும் விண்ணப்பதாரர்கள், தங்களது ஏதேனும் ஒரு அடையாள அட்டையுடன் அதன் நகலில் தங்களது பாஸ்போர்ட்  அளவு புகைப்படத்தை ஒட்டி, அரசு அலுவலரிடம் சான்றொப்பம் பெற்று வர வேண்டும். மேலும் நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வரும் விண்ணப்பதாரர்கள்  அழைப்பு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சான்றிதழ்களுடன் குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒரு அசல் ஆவணத்தை கொண்டுவர வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com