துப்புரவுப் பணியை தனியாருக்கு வழங்குவதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

துப்புரவுப் பணியை  தனியாருக்கு வழங்குவதைக் கண்டித்து, தருமபுரியில்  தருமபுரி மாவட்ட ஊரக வளர்சி, உள்ளாட்சித் துறை

துப்புரவுப் பணியை  தனியாருக்கு வழங்குவதைக் கண்டித்து, தருமபுரியில்  தருமபுரி மாவட்ட ஊரக வளர்சி, உள்ளாட்சித் துறை ஊழியர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தருமபுரி மாவட்ட  ஆட்சியர் அலுவலகம் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு  அதன் தலைவர் சி.கலாவதி தலைமை வகித்தார். உள்ளாட்சித் துறை ஊழியர்கள், மேல்நிலை நீர்த் தொட்டி பராமரிப்பவர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும், தருமபுரி நகராட்சி துப்புரவுப் பணியை தனியாருக்கு வழங்குவதைக் கண்டித்தும், பேரூராட்சி, ஊராட்சிகளில் ஊழியர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாள்களில் விடுமுறை அளிக்க வேண்டும், பணியாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் முழக்கங்களை எழுப்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com