அரூரை அடுத்த வள்ளிமதுரை வரட்டாறு நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளைஞர் உயிரிழந்தார்.
தருமபுரி மாவட்டம், புட்டிரெட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாது மகன் சக்திவேல் (27). மளிகை கடை நடத்தி வந்தார். இவர் தனது நண்பர்கள் 4 பேருடன் வள்ளிமதுரை வரட்டாறு நீர்த்தேக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை குளித்து கொண்டிருந்தார்.
அப்போது, எதிர்பாரதவிதமாக சேற்றில் சிக்கியதில் சக்திவேல் நீரில் மூழ்கினார். இதையடுத்து, தகவல் அறிந்த அரூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சக்திவேலின் சடலத்தை மீட்டனர். இவருக்கு மனைவி விஜயலட்சுமி, 3 மகன்கள் உள்ளனர். இதுகுறித்து அரூர் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.