பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து தருமபுரியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 10 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
தருமபுரி தொலைத்தொடர்பு நிலையம் அருகே பெண்கள் அமைப்பு சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதேபோல ஆட்சியர் அலுவலகம் அருகே அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இவ்விரு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 10 பேர் மீது, அனுமதியின்றி கூடுவது மற்றும் போராட்டம் நடத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தருமபுரி நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.