மொரப்பூரில் பறக்கும் படையினர் வாகனச் சோதனை

தருமபுரி மக்களவைத் தொகுதித் தேர்தல்,  அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிகளின்

தருமபுரி மக்களவைத் தொகுதித் தேர்தல்,  அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிகளின் இடைத்  தேர்தலில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம், பொருள்கள் வழங்குவதைத் தடுத்தல்,  தேர்தல் விதிமுறை மீறல்களை கண்காணித்தல் பணிகளுக்காக பறக்கும் படைகள்
அமைக்கப்பட்டுள்ளன.  
இந்த நிலையில், மொரப்பூர்  - தருமபுரி நெடுஞ்சாலையில், அரூர் வருவாய் கோட்டாட்சியர் ஜி.புண்ணியக்கோட்டித லைமையில் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல்,  அரூர் - திருப்பத்தூர், திருவண்ணாமலை சாலையிலும் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com