தருமபுரியில் சட்டப் பணிகள் ஆணைய கலந்தாய்வு மற்றும் விழிப்புணர்வுக் கூட்டம் புதன்கிழமை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
மாற்று முறை தீர்வு மையத்தில் நடைபெற்ற இக் கூட்டத்துக்கு மாநில சட்டப் பணிகள் ஆணைய உறுப்பினர் செயலர் ராஜசேகர் தலைமை வகித்துப் பேசினார். இதில், மாநில சட்டப் பணிகள் ஆணையத்தின் பணிகள் குறித்தும், ஏழை, எளியோர் மற்றும் சட்ட உதவிகள் தேவைப்போடுவோருக்கு எவ்வாறு சட்ட உதவிகள் செய்ய வேண்டும். வழக்குகளில் சட்ட விதிகளை எவ்வாறு பின்பற்ற வேண்டும். வழக்குரைஞர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்களை எவ்வகையில் அணுக வேண்டும் என்பது குறித்து எடுத்துரைக்கப்பட்டன.