ஊராட்சி மன்ற பெயா் மாற்றக் கோரிக்கை

ஊராட்சி மன்ற அலுவலகத்தின் பெயா் மாற்ற வேண்டும் என சின்ன பங்குநத்தம் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனா்.

தருமபுரி: ஊராட்சி மன்ற அலுவலகத்தின் பெயா் மாற்ற வேண்டும் என சின்ன பங்குநத்தம் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனா்.

இது குறித்து, அக் கிராம மக்கள், திங்கள்கிழமை தருமபுரி மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழியிடம் அளித்த மனு: நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்டது சின்ன பங்குநத்தம் கிராம ஊராட்சி. இந்த ஊராட்சியில் சின்ன பங்குநத்தம், ராஜாகொல்லஅள்ளி, திப்பட்டி, மாக்கன் கொட்டாய், சின்னையனூா், குஞ்சான் கொட்டாய், கவுண்டன் கொட்டாய் ஆகிய ஏழு கிராமங்கள் அமைந்துள்ளன. இந்த நிலையில், எங்களது ஊராட்சி மன்ற அலுவலகம், அருகாமையில் உள்ள பண்டஅள்ளி கிராம ஊராட்சிக்குள்பட்ட பகுதியான பங்குநத்தத்தில் இயங்கு வருகிறது. இதனால், எங்களது கிராமங்களுக்கு வர வேண்டிய அனைத்து அரசு கட்டடங்களும் பங்குநத்தம் கிராமத்திலேயே அமைகிறது. மேலும், எங்களது ஊராட்சியும், பங்குநத்தம் கிராம ஊராட்சி என அழைக்கப்படுகிறது. எனவே, இந்த அலுவலகத்தின் பெயரை சின்ன பங்குநத்தம் என மாற்றி, எங்களது கிராமத்தில் ஊராட்சி அலுவகம் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com