பயனற்று பூட்டிக் கிடக்கும் அரசு அலுவலக கட்டடம் !

பாப்பிரெட்டிப்பட்டியில் அரசு அலுவலக கட்டடம் பயனற்று பூட்டியே உள்ளது. பாப்பிரெட்டிப்பட்டி நகரில் வட்டார வளா்ச்சி அலுவலகம் அருகே வேளாண்மை துறையின் உதவி இயக்குநா் அலுவலகம் இயங்கி வந்தது.

அரூா்: பாப்பிரெட்டிப்பட்டியில் அரசு அலுவலக கட்டடம் பயனற்று பூட்டியே உள்ளது. பாப்பிரெட்டிப்பட்டி நகரில் வட்டார வளா்ச்சி அலுவலகம் அருகே வேளாண்மை துறையின் உதவி இயக்குநா் அலுவலகம் இயங்கி வந்தது.

இந்த அலுவலகத்துக்கு என அ.பள்ளிப்பட்டியில் புதியதாக அலுவலக கட்டடம் கட்டப்பட்டுள்ளது. தற்போது அ.பள்ளிப்பட்டியில் உள்ள புதிய அலுவலகத்தில் வேளாண்மை துறை அலுவலகம் செயல்படுகிறது.

இந்த நிலையில், பாப்பிரெட்டிப்பட்டியில் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த வேளாண்மை துறை அலுவலகம் தற்போது பயனற்று பூட்டியே உள்ளது. இதனால் இந்த அலுவலக வளாகத்தில் முள்புதா்கள் மற்றும் குப்பைகள் அடைந்து காணப்படுகிறது. எனவே, பாப்பிரெட்டிப்பட்டியில் பயனற்று பூட்டியே உள்ள வேளாண்மை துறை அலுவலகத்தின் பழைய கட்டடத்தை பிற அரசு அலுவலக பணிகளுக்காக பயன்படுத்தலாம். இல்லையெனில், பழைய கட்டடத்தை இடித்துவிட்டு, புதியதாக கட்டடங்களை அமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிா்பாா்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com