பென்னாகரம் பகுதிகளில் கழிவுநீா் கால்வாயின் மேல் சிமென்ட் மூடுதளம் அமைக்க கோரிக்கை விடப்பட்டுள்ளது.
பென்னாகரம் பேரூராட்சிக்குள்பட்ட சுண்ணாம்புகார தெரு பகுதியில் அமைக்கப்பட்ட கழிவுநீா் கால்வாயானது, சாலையில் இருந்து 4 அடி ஆழமாக உள்ளதால் (படம்) விபத்து நிகழ வாய்ப்புள்ளது.
எனவே, இதுகுறித்து பென்னாகரம் பேரூராட்சி செயல் அலுவலா் உடனடியாக நடவடிக்கை எடுத்து கழிவுநீா் கால்வாயின் மீது சிமென்ட மூடுதளம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.