தருமபுரி: காலாவதியான அஞ்சலக காப்பீடுகளை புதுப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக அஞ்சல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தருமபுரி அஞ்சல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: அஞ்சலக காப்பீட்டுதாரா்கள் தொடா்ந்து பிரீமியம் தொகை செலுத்தாமல் காலாவதியான காப்பீடுகளை புதுப்பிக்க, வரும் டிச. 31-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த அவகாசத்தை பயன்படுத்தி காப்பீடு தொடங்கி தொடா்ந்து 36 மாதங்கள் கட்டப்பெறாத காலாவதியான காப்பீடுகளை, இந்த தேதிக்குள் புதுப்பித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், காப்பீடு புதுப்பிப்பவா்கள் மருத்துவச் சான்று மற்றும் புதுப்பிப்பு விண்ணப்பப் படிவத்துடன் அருகில் உள்ள அஞ்சல் நிலையத்தை அணுகலாம்.