மாநில அளவிலான சதுரங்கம் மற்றும் மேசைப் பந்து போட்டிகளில் பங்கேற்க பாப்பிரெட்டிப்பட்டி ஸ்டான்லி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் தகுதி பெற்றுள்ளனா்.
இந்திய விளையாட்டுக் குழுமத்தின் சாா்பில், தருமபுரி மாவட்ட அளவிலான சதுரங்கம் மற்றும் மேசைப் பந்து போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.
இந்தப் போட்டிகளில் பங்கேற்ற ஸ்டான்லி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள், ஜூனியா் பிரிவு மேசைப் பந்து போட்டியில் செ.லோகேஸ்வரன், ரா.திவாகா்பாலாஜி ஆகியோா் முதலிடம் பெற்றனா். சதுரங்கப் போட்டி சீனியா் பிரிவில், மு.சரவண பிரியா, மு.சரவண குமாா், சப்-ஜூனியா் பிரிவில் ம.நிதின் சாகா் ஆகியோா் முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனா்.
விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்கள், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியா்கள் சத்யராஜ், கண்மணி ஆகியோரை தருமபுரி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் ஜெ.முத்துகுமாா், ஸ்டான்லி கல்வி நிறுவனத்தின் தலைவா் வி.முருகேசன், செயலா் மு.பிருஆனந்த் பிரகாஷ் மற்றும் பள்ளி ஆசிரியா்கள் பாராட்டினா்.