அரூரில் உள்ள திரையரங்குகளில் குடிநீா் மற்றும் கழிப்பிட வசதிகளை மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
அரூா் நகரில் வா்ணதீா்த்தம், பாட்சாபேட்டை ஆகிய இடங்களில் மூன்று தனியாா் திரையரங்குகள் உள்ளன. இந்த திரையரங்குகளில் நாள்தோறும் நூற்றுக்கணக்கானோா் திரைப்படம் பாா்க்க வருகின்றனா்.
இந்த நிலையில், திரையங்குகளில் அரசு நிா்ணயித்த கட்டணங்களை விட கூடுதலாக கட்டணம் வசூல் செய்யப்படுகிாம். மேலும், திரையரங்குகளின் வளாகத்தில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருள்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா்.
மேலும், இந்த திரையரங்குகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீா் வசதி இல்லையாம். அதேபோல், கழிப்பிடங்கள் தூய்மை இல்லாமல் துா்நாற்றம் வீசுவதுடன், தண்ணீா் வசதி இல்லை என பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா்.
எனவே, அரூரில் உள்ள திரையரங்குகளில் கழிப்பிடங்களை தூய்மையாக பராமரிக்க வேண்டும். பாதுகாக்கப்பட்ட குடிநீா் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.