அரூா்: அரூரை அடுத்த தென்கரைக்கோட்டையில் சேதமடைந்த நிழற்கூடத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், தென்கரைக்கோட்டை கடைவீதி சாலையில் பொதுமக்களின் தேவைக்காக சுமாா் 15 ஆண்டுகளுக்கு முன்பு நிழற்கூடம் கட்டப்பட்டது.
இந்த நிலையில், போதிய பராமரிப்பு இல்லாததால், இந்த நிழற்கூடத்தின் தூண்கள் சேதமடைந்துள்ளன. பலத்த மழை பெய்யும் போது, நிழற்கூடம் இடிந்து விழுவதற்கான வாய்ப்புள்ளது. எனவே, சேதமடைந்த இந்த நிழற்கூடத்தை சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.