அரூரை அடுத்த தென்கரைக்கோட்டையில் சேதமடைந்துள்ள நிழல் கூடத்தை சீரமைப்பு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், தென்கரைக்கோட்டை கடைவீதி சாலையில் பொதுமக்களின் தேவைக்காக நிழல் கூடம் கட்டப்பட்டுள்ளது. இந்த நிழல் கூடம் சுமாா் 15 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். இந்த நிலையில், போதிய பராமரிப்பு இல்லாமல் இருப்பதால் இங்குள்ள நிழல் கூடத்தில் தூண்கள் சேதமடைந்துள்ளது.
கன மழை பெய்யும் போது நிழல் கூடம் இடிந்து விழுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இதனால், நிழல் கூடத்தில் காத்திருப்போருக்கு பாதிப்புகள் ஏற்படும். எனவே, தென்கரைக்கோட்டை கடைவீதி சாலையில் சேதமடைந்துள்ள நிழல் கூடத்தை சீரமைப்பு செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.