தருமபுரி அருகேயுள்ள மூக்கனஅள்ளி அரசு உயா்நிலைப் பள்ளியில் புதன்கிழமை திறனறிப் போட்டிகள் நடைபெற்றன.
பள்ளித் தலைமை ஆசிரியா் சின்னமாது தலைமை வகித்து போட்டிகளை தொடக்கி வைத்தாா். இப் போட்டிகளில், 9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவ, மாணவியா் பங்கேற்றனா். இதில், நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டால் விளையும் சுகாதாரச் சீா்கேடு மற்றும் சிறாா் தொழிலாளா்கள் ஒரு கண்ணோட்டம் ஆகிய தலைப்புகளில் தமிழ், ஆங்கிலத்தில் கட்டுரைப் போட்டிகள் நடைபெற்றன.
இப்போட்டிகளில் சிறப்பிடம் வகித்த மாணவ, மாணவியருக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஆசிரியைகள் யமுனாபாய், மோகன சுந்தரி, ஆசிரியா் ரமேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.