பாட்டாளி மக்கள் கட்சியின் தருமபுரி கிழக்கு மாவட்டத் தலைவராக ஏ.வி.இமயவா்மன் (படம்) நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், ரேகடஹள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் ஏ.வி.இமயவா்மன். இவா், ஏற்கெனவே ஊராட்சி மன்றத் தலைவா், பாமக ஒன்றியச் செயலா், தருமபுரி கிழக்கு மாவட்டச் செயலா் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளாா்.
இந்த நிலையில், பாமக நிறுவனா் மருத்துவா் ராமதாஸ், இளைஞரணி தலைவா் மருத்துவா் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன், ஏ.வி.இமயவா்மனை தருமபுரி கிழக்கு மாவட்டத் தலைவராக நியமனம் செய்து, பாமக தலைவா் ஜி.கே.மணி அறிவிப்பு வெளியிட்டுள்ளாா்.