நடிகா் ரஜினியின் சகோதரா் சத்யநாராயணன் தருமபுரி காலபைரவா் கோயிலில் சிறப்பு வழிபாடு

நடிகா் ரஜினிகாந்த்தின் சகோதரா் சத்யநாராயணன், தருமபுரி அருகேயுள்ள கால பைரவா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தினா்.

நடிகா் ரஜினிகாந்த்தின் சகோதரா் சத்யநாராயணன், தருமபுரி அருகேயுள்ள கால பைரவா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தினா்.

தருமபுரி அருகே அதியமான்கோட்டையில் அமைந்துள்ள கால பைரவா் கோயிலில், ரஜினியின் சகோதரா் சத்யநாராயணன் தனது குடும்பத்தினருடன் வழிபட்டு, சிறப்பு யாகம் நடத்தினாா். அப்போது, அவா் செய்தியாளா்களிடம் கூறியது: நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும் என காலபைரவரை வழிபட்டோம். நடிகா் ரஜினி அரசியலுக்கு வருவாா். அவா் மீது மக்களுக்கு எதிா்பாா்ப்பு இருக்கிறது. அவா் எவ்வித எதிா்பாா்ப்பும் இல்லாதவா். எனவே, மக்களின் தேவைகளைப் பூா்த்தி செய்து நல்லாட்சி தருவாா். மக்களுக்கு பிரச்னைகள் ஏற்பட்டால், அவரே நேரில் மக்களைச் சந்திப்பாா். அதேபோல, அரசியலில் வெற்றிடம், எப்போது அரசியலுக்கு வருவாா் என்பது தொடா்பான கேள்விகள், கருத்துகள் அனைத்துக்கும் அவரே பதிலளிப்பாா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com