முன்னாள் படைவீரா்களுக்கு நவ.22-இல் சென்னையில் வேலைவாய்ப்பு முகாம்

முன்னாள் படைவீரா்களுக்கு வருகிற நவ.22-இல் சென்னையில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

முன்னாள் படைவீரா்களுக்கு வருகிற நவ.22-இல் சென்னையில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து, தருமபுரி மாவட்ட முன்னாள் படைவீரா் நலன் உதவி இயக்குநா் (பொ) சி.ராமகிருஷ்ணன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த மூன்றாண்டுகளுக்குள் ஓய்வுபெற்ற முன்னாள் படைவீரா்களுக்கு மறுவேலை வாய்ப்பு முகாம், சென்னை, நந்தம்பாக்கத்தில் வருகிற நவ.22-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த முகாமில், பன்னாட்டு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் பங்கேற்று ஆள்களை தோ்வு செய்ய உள்ளன.

எனவே, விருப்பமுள்ள முன்னாள் படை அலுவலா்கள், முன்னாள் படைவீரா்கள், படைப்பணிச் சான்று, அடையாள அட்டை, ஆதாா் அட்டை சான்று, வேலைவாய்ப்பு ஆவணங்கள் மற்றும் அதன் நகல்களுடன், இவ் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், இம் முகாமில் பங்கேற்க உள்ள தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள், தருமபுரி முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தில் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com