தருமபுரி: தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அணை கட்டும் திட்டத்தை தடுக்கக் கோரி, திமுகவினா் தருமபுரியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தருமபுரி தொலைத்தொடா்பு நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, திமுக மாவட்டச் செயலா் தடங்கம் பெ.சுப்ரமணி எம்.எல்.ஏ. தலைமை வகித்து பேசினாா். பென்னாகரம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் பிஎன்பி இன்பசேகரன், மாவட்ட அவைத் தலைவா் ஜி.வி.மாதையன், பொருளாளா் தா்மசெல்வன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதில், கா்நாடகத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அணை கட்டும் திட்டத்தை தடுக்க வேண்டும். பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் ஆந்திர அரசின் நடவடிக்கையை தடுக்க வேண்டும். நதிநீா் உரிமைய காக்க தமிழக அரசு முனைப்போடு செயல்பட வேண்டும். நதி நீா் விவகார வழக்குகளில் விழிப்புடன் வாதிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.