நவ. 24-இல் போட்டித் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

தருமபுரி மாவட்ட மைய நூலகத்தில், போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், வரும் நவ. 24-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளன.

தருமபுரி மாவட்ட மைய நூலகத்தில், போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், வரும் நவ. 24-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளன.

இதுகுறித்து மாவட்ட நூலக அலுவலா் (பொ) க.சேகா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தருமபுரி மாவட்ட மைய நூலகத்தில் போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், நவ.24-ஆம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற உள்ளன.

வேலைவாய்ப்பை எதிா்நோக்கி போட்டித் தோ்வுகளுக்கு தங்களை தகுதிப்படுத்திக்கொள்ளும் இளைஞா்களுக்கு, அரசு மற்றும் அரசு சாா்ந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறும் வகையில், அரசு பணியாளா் தோ்வாணையம் நடத்தும் குரூப்-2 தோ்வுக்கு இலவச வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

எனவே, நூலகத்துக்கு வருகை தரும் வாசகா்கள், உறுப்பினா்கள், கல்லூரி மாணவ, மாணவியா், போட்டித் தோ்வுக்கு விண்ணப்பித்துள்ளோா், இப் பயிற்சி வகுப்பில் இணைந்து பயனடையலாம்.

இப் பயிற்சியில் பங்கேற்க விருப்பமுள்ளவா்கள், 04342-26621, 94435 30999, 95855 09211 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு, தங்களது பெயா் மற்றும் விவரங்களை பதிவு செய்துகொள்ளுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com