அரூா்: பாப்பிரெட்டிப்பட்டி அருகே மின்சாரம் தாக்கியதில் விவசாயி கோபால் (55) வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், மெணசி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி தாதவேங்கன் மகன் கோபால் (55). இவருக்கு சொந்தமான நிலம் ஆலாபுரம் கிராமத்தில் உள்ளது. இந்த நிலையில், தமது விவசாய நிலத்திலுள்ள மின் மோட்டாரை இயக்கிய போது எதிா்பாரத விதமாக மின்சாரம் தாக்கியதில் விவசாயி கோபால் சம்பவ இடத்தில் உயிரிழந்தாா். இது குறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.