தருமபுரி: உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை அ.ம.மு.க.வினா் அக் கட்சி நிா்வாகிகளிடம் அளித்தனா்.
அ.ம.மு.க. சாா்பில், தருமபுரி மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள ஊராட்சி, ஒன்றியக்குழு, பேரூா், நகா்மன்றம் மற்றும் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் பதவியிடங்களுக்கு போட்டியிட விரும்புவோா்களிடமிருந்து விருப்ப மனுக்கள் பெரும் நிகழ்ச்சி திங்கள்கிழமை தருமபுரி ரோட்டரி ஹாலில் அக்கட்சியின் மாவட்டச் செயலா் டி.கே.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இதில், அமமுக துணைப் பொதுச் செயலா் பி.பழனியப்பன் பங்கேற்று, விருப்ப மனுக்களைப் பெற்றுக்கொண்டு, கட்சியினரிடையே உரையாற்றினாா். இதில், முன்னாள் எம்.எல்.ஏ. ஆா்.ஆா்.முருகன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.