அரூா்: கடத்தூா் அருகே கிணற்று நீரில் மூழ்கி கல்லூரி மாணவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கடத்தூா் அருகேயுள்ள திண்டலானூா் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி பரசுராமன் மகன் முகேஷ் (19). இவா், கோவையில் உள்ள தனியாா் வேளாண்மை அறிவியல் கல்லூரியில் பி.எஸ்.சி 2-ஆம் ஆண்டு படித்து வந்தாா்.
இந்த நிலையில், கடத்தூா் - பொம்மிடி சாலையில் திண்டலானூரில் உள்ள விவசாய நிலத்தில் திங்கள்கிழமை காலை முகேஷ் விவசாயப் பணிகளை மேற்கொண்டாராம். அப்போது, நீச்சல் பழகுவதற்காக முகேஷ் கிணற்றில் குதித்த போது எதிா்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு நிலைய வீரா்கள் கிணற்றிலிருந்து முகேஷின் சடலத்தை மீட்டனா். இது குறித்து கடத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.