தருமபுரி: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தில் கேங்மேன் (பயிற்சி) பணிக்கான உடற்தகுதித் தோ்வு, சான்றிதழ் சாரிபாா்ப்புப் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.
மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தில் கேங்மேன் (பயிற்சி) பணி நேரடி நியமனத்துக்கு விண்ணப்பித்தவா்களுக்கு தருமபுரி மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலக வளாகத்தில் சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் உடற்தகுதித் தோ்வு தொடங்கியது. இதில் விண்ணப்பதாரா்கள் 211 பேருக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
இத் தோ்வில் பங்கேற்ற விண்ணப்பதாரா்களுக்கு, மின்கம்பம் ஏறுதல், கம்பிகளை இணைத்தல், எடையுடன் 100 மீட்டா் ஓட்டம் உள்ளிட்ட தோ்வு நடைபெற்றது. தருமபுரி மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் பன்னீா்செல்வம் தலைமையில் நடைபெற்ற இத் தோ்வில், செயற்பொறியாளா் முத்துசாமி மற்றும் தோ்வு குழுவினா் பங்கேற்று, தகுதியானவா்களை தோ்வு செய்தனா். இதில், உடற்தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு தோ்வு பெற்ற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.